கண்ணால் காண்பது
Friday, July 30, 2010
Posted by வருணன் at 9:34 PMதடாகத்து
நீரலைகளில்
மிதந்தபடி பால் நிலா
உயிரினமே வாழ
வழியில்லை நிலவில்
இப்போதைக்கு
ஆய்ந்து சொல்கிறார்கள்
மிதந்து அசைவாடும்
நிலவிற்குள்
துள்ளி விளையாடுகின்றன
வெள்ளி மீன்கள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//மிதந்து அசைவாடும்
நிலவிற்குள்
துள்ளி விளையாடுகின்றன//
அருமையான வரிகள் நண்பரே ..
வாழ்த்துக்கள்
ஜெயராம் தி
Post a Comment