Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

பொய்களைப் பழிக்காதீர்

Tuesday, August 31, 2010

பொய்களைப் பழிக்காதீர்
அவை அழகானவை
கலைனயம் மிக்கவை

உண்மயைப் போல
இயந்திரத்தனமாய்
ஒருபோதுமவை இருப்பதில்லை

உண்மைகள்
ஒரு நாளும் ஒத்திகைகள்
பார்த்துக் கொள்வதில்லை

உண்மைகள் விறைப்பானவை
பொய்கள் காற்றின் திசையில்
லாவகமாய் வளையும் நாணல்கள்

உண்மை எதுவென
நாமுணர ஏதுவாகிறது
பொய்களால்தான்

பொய்களைப் பழிக்காதீர்
அவை அழகானவை
முன்தயாரிப்புள்ளவை.


இக்கவிதையை வெளியிட்ட இளமை விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்.
http://youthful.vikatan.com/youth/NYouth/varunanpoem300810.asp