பொய்களைப் பழிக்காதீர்
அவை அழகானவை
கலைனயம் மிக்கவை
உண்மயைப் போல
இயந்திரத்தனமாய்
ஒருபோதுமவை இருப்பதில்லை
உண்மைகள்
ஒரு நாளும் ஒத்திகைகள்
பார்த்துக் கொள்வதில்லை
உண்மைகள் விறைப்பானவை
பொய்கள் காற்றின் திசையில்
லாவகமாய் வளையும் நாணல்கள்
உண்மை எதுவென
நாமுணர ஏதுவாகிறது
பொய்களால்தான்
பொய்களைப் பழிக்காதீர்
அவை அழகானவை
முன்தயாரிப்புள்ளவை.
இக்கவிதையை வெளியிட்ட இளமை விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்.
http://youthful.vikatan.com/youth/NYouth/varunanpoem300810.asp
Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts
Subscribe to:
Posts (Atom)