தொடர் பாடல்

Monday, July 12, 2010



முடிவில்லததொரு தொடர்பாடலைப்
பாடியபடி பிறை நிலாக்களை
நறுக்கி நறுக்கி நீயுன்
விரல்களின் உயரத்தைக் குறைத்தபடியிருக்கிறாய்
நானோ ஒரு மாளிகையின் பலகணியில்
பழகிய உதடுகளுடனும் பழகாத முத்தங்களுடனும்
நீ வருவாயென எதிர்பார்திருக்கும்
ஒவ்வொரு காத்திருப்பையும் சட்டமிட்டு என் மாளிகையின்
சுவர்களில் தொங்கவிட்டபடியிருக்கிறேன்
தூரத்தில் தெரியும் உன் நிழலுருவை வருந்தியழைக்கும்
என் அழைப்புகள்
தவழ்ந்து மேகமாகி உன் மேலே நிலைக்கின்றன
நீயோ மழையாய்ப் பொழியும் என் விண்ணப்பங்களில்
நனையாது கால்களைச் சுற்றிக் குழையும் செல்ல
நாயொன்றை வாரியணைத்து முத்தமிடுகிறாய்.
பகலும் இரவும், இரவும் பகலும் கடந்திட்ட பின்னரும்
சுவர்களில் மோதி மோதி எதிரொலிக்கிறது
உன்னுடைய தொடர் பாடல்.

No comments:

Post a Comment