
இருள் போர்த்திய அறைக்குள்
தீக்குச்சி உரச
பரவியிருந்த இருளை
உண்டு சிரித்தது தீச்சுடர்
கணப்பொழுதில்
இருள் தீச்சுடரை
விழுங்கிச் செரித்து
மௌனமாய் பரவியது
மீண்டும்
ஒளியென்பது இருளுக்கு இடையே
விடப்படும் இடைவேளை.
சொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.
No comments:
Post a Comment