உண்பவனே உணவாக

Sunday, July 25, 2010



இருள் போர்த்திய அறைக்குள்
தீக்குச்சி உரச
பரவியிருந்த இருளை
உண்டு சிரித்தது தீச்சுடர்
கணப்பொழுதில்
இருள் தீச்சுடரை
விழுங்கிச் செரித்து
மௌனமாய் பரவியது
மீண்டும்
ஒளியென்பது இருளுக்கு இடையே
விடப்படும் இடைவேளை.

No comments:

Post a Comment