கண்ணால் காண்பது

Friday, July 30, 2010



தடாகத்து
நீரலைகளில்
மிதந்தபடி பால் நிலா

உயிரினமே வாழ
வழியில்லை நிலவில்
இப்போதைக்கு
ஆய்ந்து சொல்கிறார்கள்

மிதந்து அசைவாடும்
நிலவிற்குள்
துள்ளி விளையாடுகின்றன
வெள்ளி மீன்கள்

1 comment:

Thooral said...

//மிதந்து அசைவாடும்
நிலவிற்குள்
துள்ளி விளையாடுகின்றன//

அருமையான வரிகள் நண்பரே ..

வாழ்த்துக்கள்
ஜெயராம் தி

Post a Comment