
கோவிலுக்குள் சென்று
கடமையெனக் கருதி
மந்திரங்கள் ஓதி
பிரகாரம் சுற்றி
வேண்டுதல் நிறைவேற்றும்
பொழுதெல்லாம் ஏதும்
தெரியவில்லை வித்தியாசமாய்
தான் சுயம் துறந்து
யாசித்துப் பெற்ற ஒரு கவளத்தில்
பாதியை தெருவோர நாய்க்கு
பங்கிட்டுக் கொடுத்த யாசகர்
மீது பார்வை படிந்தது தற்செயலாய்
தூரத்து கருவறையில்
சுடர்ந்த ஒளிக்கவிதை
காற்றினில் அசைவாடியது
அதன் அன்பெனும் சோதி
இளகிக் கிடந்த
இதயப் பள்ளத்தை
நிறைக்கத் தொடங்கியது
முதன் முறையாய் விழித்தது அகம்
எனக்குள் முழுதாய் நான்
மீண்டும் பிறந்தேன்.
No comments:
Post a Comment