
வியாபாரம் அற்றுப்போன
நெருக்கடி நேரத்திலும்
அநாதைச் சிறுமியின்
பசியாற்றும்
பழக்காரக் கிழவி
துணைவியில்லா
தனிமை தருணங்களில்
அன்பாய் அன்னமிடும்
அடுத்த வீட்டுப் பெண்
பேருந்தில்
தன்னை உரசித் தொலைத்திருப்பினும்
அவன் தவறி விழுந்து
உயிர் மாய்கையில்
கண் கலங்கும்
பணி செல்லும் யுவதி
வசைபாடும் மாமியார்
நலமடைய விரதமிருக்கும்
மாட்டுப் பெண்கள்
இறந்து விட்ட
கணவனையே இன்னும்
நினைத்து பத்தினியாய் வாழும்
பல்லாயிரம் பெண்டிர்
வையத்தில்
முதுகில் சிறகுகள்
முளைக்காத தேவதைகள்
இன்றும் வாழ்ந்தபடி
பல இடங்களில்.
No comments:
Post a Comment