சிறகில்லா தேவதைகள்

Friday, July 23, 2010



வியாபாரம் அற்றுப்போன
நெருக்கடி நேரத்திலும்
அநாதைச் சிறுமியின்
பசியாற்றும்
பழக்காரக் கிழவி

துணைவியில்லா
தனிமை தருணங்களில்
அன்பாய் அன்னமிடும்
அடுத்த வீட்டுப் பெண்

பேருந்தில்
தன்னை உரசித் தொலைத்திருப்பினும்
அவன் தவறி விழுந்து
உயிர் மாய்கையில்
கண் கலங்கும்
பணி செல்லும் யுவதி

வசைபாடும் மாமியார்
நலமடைய விரதமிருக்கும்
மாட்டுப் பெண்கள்

இறந்து விட்ட
கணவனையே இன்னும்
நினைத்து பத்தினியாய் வாழும்
பல்லாயிரம் பெண்டிர்

வையத்தில்
முதுகில் சிறகுகள்
முளைக்காத தேவதைகள்
இன்றும் வாழ்ந்தபடி
பல இடங்களில்.

No comments:

Post a Comment