
சதை போதையில்
சிக்கிச் சிதைகின்றன
சில இச்சை இரவுகள்
நோய் வருத்திய
உடலசதியில்
மயங்கிக் கரைகின்றன
சில
கடந்த கால
நினைவுகளை அசைபோட
இம்சிக்கின்றன சில
தூண்டில் இரவுகள்
வரும் நாட்களைக் குறித்த
கேள்விக் கணைகள்
நெஞ்சில் தைக்க
விட்டத்தை வெறித்தபடி துயிலாது
துடிக்கின்றன பல இரவுகள்
அழியாத கோலங்களாய்
இருள் படர்ந்த இரவுகளோ
என்றும் போல் இயல்பாய்
எதிர்நோக்குகின்றன விடியல்களை.
No comments:
Post a Comment