அழியாத கோலங்கள்

Tuesday, July 27, 2010



சதை போதையில்
சிக்கிச் சிதைகின்றன
சில இச்சை இரவுகள்

நோய் வருத்திய
உடலசதியில்
மயங்கிக் கரைகின்றன
சில

கடந்த கால
நினைவுகளை அசைபோட
இம்சிக்கின்றன சில
தூண்டில் இரவுகள்

வரும் நாட்களைக் குறித்த
கேள்விக் கணைகள்
நெஞ்சில் தைக்க
விட்டத்தை வெறித்தபடி துயிலாது
துடிக்கின்றன பல இரவுகள்


அழியாத கோலங்களாய்
இருள் படர்ந்த இரவுகளோ
என்றும் போல் இயல்பாய்
எதிர்நோக்குகின்றன விடியல்களை.

No comments:

Post a Comment