
குலமரம் செழிக்க நீர்தேடும்
வேராய் அந்நிய தேசம் படர்ந்தேன்
விலை பேசப்பட்டன என் சிறகுகள்
இப்போது
அயலான் என் சிறகுகளால்
காது குடைந்து சுகிக்கிறான்
அழகிய சீமாட்டிகள் தத்தமது
தொப்பிகளை அலங்கரித்துக் கொள்கின்றனர்
இறகுகள் ஒவ்வொன்றாய் பறிபோக
சிறகுகள் இழந்தேன்
கிடைத்த கூலியில் உயரமான மரங்களில்
கூடுகளமைத்தேன் என் குலப் பறவைகள்
களித்திருக்க
தூர தேசத்தில் சிறகுகளிழந்த நான்
மடிந்து போவேன் ஒரு நாள்
எம் கொடிகள் இங்கே தழைக்க.
7 comments:
நல்ல பொருளுடன் கூடிய கரு.
வாழ்த்துக்கள்.
நன்றி வார்த்தை
நன்றி ராஜவம்சம்
உங்களது வார்த்தைகள் உற்சாகப் படுத்துகின்றன.
தொடர்ந்து வருகை தாருங்கள்.
nice one friend
great one. keep it up.
அருமை
நன்றி கிருபா.
Post a Comment