
காற்றினில் மிதந்தாடும்
காகிதங்கள் பறக்காதிருக்க
இரு முனைகளையும்
இறுகப் பிடிக்கின்றாய் உன்
சுண்டு விரலாலும்
சுட்டு விரலாலும்
உன் மென்விரல் கரைகளுக்கு
மத்தியில் அசைவாடுகின்றன இக்கணத்தில்
என் கவிதைகளும்,புனைவுகளும்
கூடவே நானும்.
சொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.
1 comment:
tharamana muthukkal ivai
Post a Comment