பிரசவ வலி

Saturday, July 10, 2010



மண்ணை நனைத்து ஓய்ந்து விட்ட
மழையின் தூரல் மிச்சமிருந்த
நடுநிசி

குளிர் பரிசைக்
கொண்டாடியபடி ஊரெ
கனவுகளின் தேசத்தில்

நித்திரையுடன் ஊடல் கொண்டு
நான் மட்டும் மஞ்சத்தில்
புரண்ட வண்ணம்
மனச்சமவெளியில்
தெரித்து விழுந்த
வார்த்தை துணுக்குகளை
சேகரித்தபடி

வார்த்தை நரம்பெடுத்துப்
பின்னிய சிந்தனை வலையில்
சிக்கித் தவித்தது
ஞாபக சிலந்தி

பிரசவிக்க வேண்டிய அவசரம்

இமை விரித்து
வெளிச்சம் செய்து
வேகவேகமாய் சரணடைந்தேன்
காகிதப் படுக்கையில்

பேனா மருத்துவர்
பிரசவம் பார்க்க கையூட்டு
கேட்கவில்லை நல்லவேளையாய்

சுகப்பிரசவம்.

2 comments:

Kousalya Raj said...

interesting...valththukkal.

Kousalya Raj said...

word verification ketpathai eduththu vidunkal. comment panna nalla irukkum. nanri

Post a Comment