பிரசவ வலி
Saturday, July 10, 2010
Posted by வருணன் at 7:58 AMமண்ணை நனைத்து ஓய்ந்து விட்ட
மழையின் தூரல் மிச்சமிருந்த
நடுநிசி
குளிர் பரிசைக்
கொண்டாடியபடி ஊரெ
கனவுகளின் தேசத்தில்
நித்திரையுடன் ஊடல் கொண்டு
நான் மட்டும் மஞ்சத்தில்
புரண்ட வண்ணம்
மனச்சமவெளியில்
தெரித்து விழுந்த
வார்த்தை துணுக்குகளை
சேகரித்தபடி
வார்த்தை நரம்பெடுத்துப்
பின்னிய சிந்தனை வலையில்
சிக்கித் தவித்தது
ஞாபக சிலந்தி
பிரசவிக்க வேண்டிய அவசரம்
இமை விரித்து
வெளிச்சம் செய்து
வேகவேகமாய் சரணடைந்தேன்
காகிதப் படுக்கையில்
பேனா மருத்துவர்
பிரசவம் பார்க்க கையூட்டு
கேட்கவில்லை நல்லவேளையாய்
சுகப்பிரசவம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
interesting...valththukkal.
word verification ketpathai eduththu vidunkal. comment panna nalla irukkum. nanri
Post a Comment