கவலைக் குழந்தைகள்

Tuesday, August 24, 2010



நம் பந்தத்தின் விளைவாய்
இமை மூடா இரவுகளோடு
வாசம் செய்கிறேன் நான்

உன்னைப் பற்றிய
குழப்பங்களால் அலைகிறது மனம்
ஓய இடம் தேடி

வேண்டாமென்றே சொன்னாலும்
உன்னைப் பற்றிய
கவலைக் குழந்தைகள் என்
மனக்களிறின் மீதேறியமர்ந்து
சவாரி செய்யவே விரும்புகின்றன!

4 comments:

Kousalya Raj said...

nice one too...

Anonymous said...

வேண்டாமென்றே சொன்னாலும்
உன்னைப் பற்றிய
கவலைக் குழந்தைகள் என்
மனக்களிறின் மீதேறியமர்ந்து
சவாரி செய்யவே விரும்புகின்றன!

very nice...

வருணன் said...

நன்றி நண்பர்களே .

கோநா said...

கவலைக் குழந்தைகள் very nice uruvagam varunan

Post a Comment