துளிர்க்கும் முடிவுகள்

Friday, August 20, 2010



கவிதையொன்று
முடிந்த இடத்தினின்று
மீண்டும் எழுதப்படுகிறது

முடிந்ததாய் எண்ணிய
பொழுதில் வழிய ஆரம்பிக்கிறது
மனதை உருக்கிய இசையொன்று

பொய்த்ததாய் நினைத்திருந்த
ஆகாயத்தினின்று மண் சேர்கிறது
ஒரு சிறு தூறல்

போனதாய் நினைத்திருந்த
காதலி மீண்டும்
பேச துவங்கியிருக்கிறாள்.

No comments:

Post a Comment