பழையன கழிதல்

Sunday, August 22, 2010



வர்ணிக்க முடியாததொரு வலி
தைத்திடவியலா மன கிழிசல்கள்
அவ்வப்போது பூத்திட்ட சிறு புன்னகைகள்
பாவங்கள் செய்யவிருந்த தருணங்கள்
பெறத் தகுதியில்லாத போதும்
கிடைத்திட்ட சில பாராட்டுக்களும்
பல குற்றச்சாட்டுகளும்
வெப்பமாய் பணியினூடே வெளிவரும்
அயற்ச்சிப் பெருமூச்சுகள்
மேற்சொன்னதும்
இன்னும் சொல்லாத பிறவும்
கடந்து வந்து இன்றைய நாளின்
முகப்பில் நின்றபடி
கிழித்து எறிகிறேன் அன்றைய தேதியை
என் கரங்களால் – அந்த நாளின்
அனைத்து சாராம்சங்களுடன்.

2 comments:

மதுரை சரவணன் said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

வருணன் said...

நன்றி நண்பரே.
தொடர்ந்து வருகை தாருங்கள்.

Post a Comment