எல்லாம் முடிந்த பின்னே

Thursday, August 26, 2010



யாருமே தனக்கில்லையென
வீதி வழி நடப்பவனுக்கு
அவனுக்குத் தெரியாமலேயே
துணையாய் வரும்
தெருக்கள் வழிநெடுகிலும்.
ஊரடங்கும் சாமத்தில்
அண்ட இடம் கிடைத்ததும் உடன்வந்த
தெருக்களை உதறிவிட்டு உட்செல்லும்
அவனது புறக்கணிப்பால் செய்வதறியாது
திகைத்து நிற்கும் தெருவினைப்
பார்த்து ஆதரவாய் கண்சிமிட்டுகின்றன
தெருவிளக்குகள் யாரில்லையெனினும்
துணையாய் தாமிருப்பதாய் சொல்வதுபோல்.

No comments:

Post a Comment