கண்ணாடி வேர்கள்

Saturday, August 7, 2010



ஓங்கி வளர்ந்த நெல்மணிகள்
சிரம் தாழ்த்திப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
வேர்க் கண்ணாடிகளில்
பிரதிபலிக்கும்
உழவுக் கிழவர்களின்
முரட்டு உழைப்பை

நிலங்கள் மாறினாலும்
உழைத்துக் கொண்டுதானிருக்கின்றனர்
இடைவிடாது
மண் புழுக்களுடன்
சேர்ந்து சில மனிதர்களும்
இங்கெ...

No comments:

Post a Comment