எப்படியேனும்...
Monday, August 30, 2010
Posted by வருணன் at 7:48 PMஐயங்களாய்
ஆற்றாமையாய்
கருணையாய்
கோபமாய்
மறுதலிப்பாய்
உன் வார்த்தைகள்
வார்த்தைகளால் வார்க்கவியலா
உணர்வுகளின் வெளிப்பாடாய்
ஆழ்மனதின் கேவலாய்
கெஞ்சலாய்
குழப்பமாய்
யாசிப்பாய்
உன் பார்வைகள்
ஒவ்வொரு சந்திப்புகளிலும்
எப்படியேனும் என் மீது
படிந்துவிடுகின்றாய்
வார்த்தைகளாகவோ
பார்வைளாகவோ
வெறும் சாட்சியாய் நான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment