போகட்டும் விடு

Wednesday, August 18, 2010



பகலுக்கு ஒளியூட்டும்
ஆதவன் அணைகையில்
இரவுக்கு தெம்பூட்டும்
பால் நிலா
தகிக்கும் வெயிலுக்கு
மாற்றாய் நிழலும் கிட்டும்
ரணங்கள் தரும் வையமே
மருந்தும் தரும்
கவலை கொள்ளாய் மனமே!
சன்னல்கள் அடைபட்டால்
போகட்டும்
கதவுகள் திறக்கும்.

No comments:

Post a Comment