நான் நகரும் நகரம்

Saturday, August 14, 2010



அதிகாலை துயில் எழுந்து
அவசரக் குளியல்
அரைகுறை உணவு
ஆலாய் பறந்து அலுவலகம்
செல்லும் தடத்தில் போக்குவரத்து
நெரிசல் வாங்கும் பாதி சீவனை
மேலதிகாரியின் வசவுகள்
வாங்கும் மீதி சீவனை
அரட்டையுடன் உட்செல்லும்
மதிய உணவு
ஐந்தடிக்கக் காத்திருந்து
மீண்டும் கட்டப்படும்
கால்களில் சக்கரம்
யதார்த்தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும்
நகரத்துக்குள் தகுதிக்கு மீறிய அவாக்களுடன்
தொலைத்துக் கொண்டிருக்கிறேன்
என்னையும் என் பரிசுத்தத்தையும்.

1 comment:

கோநா said...

nice kavithai varunan, ஆனால் நீங்கள் எந்த பரிசுத்தமானவற்றை இழந்தீர்கள் என்பதை கவிதையில் இன்னும் தெளிவாய் சொல்லிருக்கலாம்

Post a Comment