உன்னோடிருத்தல்
Monday, August 9, 2010
Posted by வருணன் at 9:32 PMநீ பருகும் நீராய் மாறி
உனக்குள் புகுவேன்
வியர்வைத் துளியாய்
உன் மீது வழிவேன்
அமரும் இருக்கையாகி
உன்னை உள்வாங்கி அணைப்பேன்
யாக்கை யுடைத்து
வளியாய் மாறி
உன்னுள் புகுவேன்
தென்றலாய் மாறி உன்
குழல் கலைத்து அதனுள்
கரைவேன்
உன்னோடிருத்தல்
மட்டுமே முக்கியம்
எதுவாய் என்பதல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
தூய காற்று தூய தண்ணீர் போல உங்களது தூய காதல் ...
மகிழ்ச்சி ஜோ !
நன்றிகள் பல நியோ.
very lovely varunan...
Post a Comment