நான் யார்?

Tuesday, September 21, 2010



எல்லையற்ற கருணை கமழும்
அகத்தே ஒரு பொழுதில்
வெறிகொண்டு தசை திண்ணத்
துடிக்கும் ஆறாத வேட்கையொன்று
பிறிதொரு பொழுதில்
எங்கோ நிகழும் ஏதோ ஒரு
கொடுமைக்காய் கசிந்துருகும்
மலர் மனது
இரவின் வெம்மையில் தகிக்கும்
தனிமை புணர்ந்தடங்கும்
வேட்கைகள் வளர்த்தெடுத்த
அரூபமான பெண்மையொன்றை
மிருகம் தணிந்து மனிதம் என்னுள்
மீண்டும் மலருமந்த தருணத்தில்
மடிந்து உயிர்ப்பேன் இன்னொரு முறை
அடங்கும் வரை அசரீரியாய்
உள்ளிருந்து ஒலிக்குமந்த ஒற்றை
கேள்வி எல்லா தருணங்களிலும்.

2 comments:

Post a Comment