சாட்சி

Saturday, September 11, 2010



நாம் அமர்ந்திருக்கும்
அறையின் மின்விசிறியின்
மெல்லிய சுழற்சி
நம் மௌனத்தால்
அரவை இயந்திரத்தின்
ஒலிபோல் இம்சிக்கிறது

ஒளியை உமிழும்
குழல் விளக்கினைக்
காட்டிலும்
மேம்பட்ட பிராகாசத்தைக்
காண முடிகிறது
உன் விழிகளில்

கால் விரல்களால்
தரையில் கோலமிடுவதும்
கைகளை பிசைந்தபடியும்
அவ்வப்போது நகம் கடித்தபடியும்
கரைக்கின்றாய் காலத்தை

உன்னருகே
அமர்ந்தபடி நானுன்னை
உற்று பார்க்கிறேன்.

No comments:

Post a Comment