இளவரசி

Wednesday, September 15, 2010



மதில்கள் அணைத்த மாடக்கூடங்கள்
ரோஜா இதழ்கள் மிதக்கும் குளியல் குளம்
முழுமதி நனைத்த புல்வெளி
அறுசுவையுணவு
தளும்பும் மதுவால்
தள்ளாடும் கோப்பைகள்
அணிகளும், பட்டுப் பீதாம்பரங்களும்,
பூப்பந்து விளையாட தோழியரும்...
ஏவலாட்கள் அழைப்பிற்காய் தவங்கிடக்க
இன்னிசையூற்று எங்கும் வழியும்.
விடியலின் கதிர்கள் முகம் நனைக்க
சுயநினைவோடு எழுவாள்
உடலொட்டிய தெருப்புழுதியை
தட்டிவிட்டபடி- கனவுகள்
அவளை என்று மேமாற்றியதில்லை;
மகிழ்வூட்டுவதில்
பாரபட்சம் பாராதவை கனவுகள்.

3 comments:

VELU.G said...

நல்ல கவிதை

வருணன் said...

நன்றி வேலு.

குட்டிப்பையா|Kutipaiya said...

மகிழ்வூட்டுவதில்
பாரபட்சம் பாராதவை கனவுகள்
எனக்கு பயமுறுத்துவதிலும் :p

Post a Comment