புறப்பாடு

Thursday, September 23, 2010



நெடுங்காலம் ஆகிவிட்டது
நானுறங்கி
உறங்கவே இல்லையென
பொருள் கொள்ள வேண்டாம்
உறக்கத்தினின்று
எழவே இல்லையென
பொருள் கொள்க.

திடீரென ஒரு நாள்
விழிக்கதவு திறந்தது
இல்லை... இல்லை...
உடலெங்கும் விழிகள்
இருக்குமா என்ன?

தேகத்துள் எனக்கே தெரியாது
ஒளிந்து கிடந்த
ஒரு கோடி தாள்கள்
ஒரு சேர திறந்தது போல்...

மறைந்து கிடந்த ஆன்மப் பறவை
மாபெரும் சிறகுகளை
தன் உடல் சிலிர்த்து விரித்து
எதை நோக்கியோ
எங்கோ பறக்கவாரம்பித்தது.

வானுயர்ந்த தருணத்திலே
ஏதேட்சையாய் கீழ்நோக்கினால்
எனைச் சுற்றியமர்ந்து
கண்ணீர் உகுக்கின்றார் சிலர்..!

இதுவரையில் இருந்தது
உறக்கத்திலா? மயக்கத்தில்லா?
யாமறியேன்.

No comments:

Post a Comment