வெம்மையிலுருகும் நமதிந்த பிரியங்கள்

Sunday, September 23, 2012


சூழலின் குளுமையில் நடுங்கும் விரல்கள்
தேடுகிறது வெம்மையினை எங்கெங்கோ
அருகிலிருக்கும் உனதிருப்பை மறந்து
அவ்வப்போது எதேச்சையாய்
நமதிந்த நெருக்கத்தில் ஸ்பரிசிக்கின்றன
கரங்களில் குத்திட்ட ரோமங்கள்
நமக்கும் முன்னே
வெம்மை நுகரத் துடிக்கும் மறத்த விரல்கள்
கரையத் தவிக்குமுன் கழுத்து வளைவின்
ரோமக் காட்டில்
மௌனத்தில் கரைத்து நம்மிருப்பில்
உரைந்து உருகிக்கொண்டிருக்கட்டும்
நமதிந்த பிரியங்கள் இப்படியே….


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை( 21-09-12)
இணைய இதழுக்கு நன்றி.

No comments:

Post a Comment