அதையும் தா !

Monday, March 28, 2011



காய்ந்த சருகு இதழ்களை
ஈரம் தேடி வருடும் நாவுகள்
கவனியா காலத்தினுள் தேய்ந்திட்ட
குறை மதி ஊன்
ஒன்றுமில்லையென பொய்த் தெம்பூட்டுகிறாய்
குழரும் வார்த்தைகளால்
முகில் துறந்து நிலம் அமரும்
மழையின் பெருவாஞ்சை போல
பேரன்பு திரட்டி அணைத்திறுக்கும்
நடுங்கும் விரல்கள்
அணியாத அணியாய்
கண்களையும் காதுகளையும் இணைத்திடும்
திரவப் பாலம் அவ்வப்போது
அதற்கிணையாய் ஊற்றெடுக்கும்
என் விழியோரம் ஒரு நீரோடை
மொழியுதிர்கால வார்த்தைக் காட்டில்
ஆதரவு வார்த்தை பறிக்க
அலைந்து தோற்று
அயற்சியே விஞ்சுகிறது.
எனக்கெல்லாம் தந்த எந்தையே
நின் நிலை தாங்கும் மனமொன்றைத்
தருமந்த வரமொன்றையும் தா !


உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
தற்போது தேறி வரும் என் தகப்பனுக்கு சமர்ப்பணம்...

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (27.03.11)
இணைய இதழுக்கு நன்றி.

5 comments:

Unknown said...

very nice.

Kousalya Raj said...

//மொழியுதிர்கால வார்த்தைக் காட்டில்//

என்ன ஒரு அற்புதமான கற்பனை ! படிக்க படிக்க மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது...

உங்கள் தந்தை முழுவதுமாய் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

பாசக் கவிதை !

வருணன் said...

நன்றி ஜெயராணி.

நன்றி கௌசல்யா... சில காலம் ஆயிற்று தங்களை சந்தித்து. மிக்க மகிழ்ச்சி. தங்களின் பிராத்தனைகளுக்கு எனது சிறப்பு வணக்கங்கள்... :)

குட்டிப்பையா|Kutipaiya said...

நெகிழ்ச்சியான கவிதை.

வருணன் said...

நன்றி குட்டிபையா...

ம்... உணர்ச்சி வயப்பட்ட தருணத்தில் தான் இக்கவிதையை எழுதினேன்...

Post a Comment