அட்சய பாத்திரம்

Thursday, March 31, 2011



நீளும் இரவுகள்
முடிவற்ற வானம் போல
என் நித்திரை வானில் கோடிகோடி
கனவு நட்சத்திரங்கள்.

அருகாமையில் குளுமை நிலவாய்
உனைச் சுமக்கும் கனவுகள்

ஒவ்வொரு இரவும்
இமைகள் மூடி விழிகள்
திறந்து வைப்பேன் – என்
கனவு தேசத்திலுன் வரவிற்காய்.

நீண்டதொரு தியானம் போல
இரவுகளெல்லாம் கனவுகள்
கருக்கொள்வேன்.

முடிவற்ற இரவை
விடியல் கொண்டு கழுவும் தருணம்
இமைகள் திறந்தென்
விழிகளை பத்திரம் செய்வேன்.

No comments:

Post a Comment