இலக்கற்றுத் திரிதல்

Thursday, February 17, 2011



காய்ந்த சருகுகள்
இலக்கற்று திரிகின்றன
வீசும் காற்றின் இசை கோவைக்கேற்ப
முன்னேறி பின்னேறி
கவிழ்ந்துருண்டு கரணம் அடித்து
எதிர்வரும் சிறுமணற் பள்ளங்களை
லாவகமாய் கடந்தேறி
ஒன்று மற்றொன்றைத் துரத்தி
அணி சேர்ந்து ஒன்றுமற்ற மையத்தை
சுற்றி களிப்பாட்டம் ஆடி
இலக்கின்றியே திரிகின்றன...


இக்கவிதை பிப்’2011 "உயிர் எழுத்து" இலக்கிய இதழில்
வெளிவந்துள்ளது. வெளியிட்டமைக்கு நன்றி.

1 comment:

Post a Comment