என் கனவுகள் எனக்கு நிஜம்

Tuesday, October 5, 2010



கோடி கோடி இரவுகள் கழிகின்றன
என் ஒற்றை இரவில்
உலக மாந்தரனைவரின் கனவுகளனைத்தையும்
தனியொருவனாய் காண்கிறேன்.
பீரங்கி வாயினுள் மலர்க் கொத்து
தெரித்து விழும் துப்பாக்கி ரவைகள் பூக்களாய்
சித்தனைப் போல் பாடல்கள்
பாடிக் களிக்கின்றேன்- இனி
சிந்தும் செந்துளி இயற்கைக்கு
அபிஷேகமாய்
புரட்சி விதை விழுந்து
விருட்சமாய் கிளர்ந்தெழும்
வெள்ளைப் பூக்களை தன்னகத்தே
பூத்தபடி...
வெண்புறாக்களதில் வாசம் செய்யும்.
நிசத்தின் பிம்பம் பிரதிபலிக்காத
கண்ணாடி மதில்கள் என் கனவுகள்
மாயை இவையென நீ கூறுவது
கேட்கத்தான் செய்கிறது.
போகட்டும் விடு, என்னை இப்படியே...
என் கனவுகள் எனக்கு நிஜம்.

2 comments:

குட்டிப்பையா|Kutipaiya said...

//என் கனவுகள் எனக்கு நிஜம்//

very true!!

வருணன் said...

நன்றி தோழி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

Post a Comment