கனவு கலைப்பு

Monday, October 18, 2010



கருக்கலைப்புகள் குறித்து
கவலை கொள்ளும் நெஞ்சங்கள்
அவதானிப்பதில்லை
அதனை விஞ்சும்
கனவு கலைப்புகள் குறித்து

மருத்துவனாக மனக்கோட்டை கட்டியவன்
மாதக்கணக்கு எழுதுகிறான்.
கவிஞனாய் கனவில் சஞ்சரித்தவன்
கடைகளில் வேலை செய்கிறான்.
இராணுவ வீரனாக ஆசைப்பட்டவன்
நாளை அடியாளாய் திரியலாம்...
யார் கண்டது?!

விதி செய்யும் விளையாட்டில்
திசையறியாது எகிறும் பந்துகளாய்
எல்லோர் வாழ்க்கையும்.

2 comments:

அன்புடன் மலிக்கா said...

விதி செய்யும் விளையாட்டில்
திசையறியாது எகிறும் பந்துகளாய்
எல்லோர் வாழ்க்கையும்//

உண்மை உறைத்து கத்துகிறது.

நன்றாக இருக்கு வருணன்..

Anonymous said...

விதியின் கையில் பொம்மைகளாய் நாம் :(

Post a Comment