குறிப்பறிந்து பொருளுணர்க

Friday, March 22, 2013









பொங்கி நுரைத்தபடி
பெருங்கடல் அலை சீற்றம்
அடையத் துடிக்கிறது கரையை

எல்லைகள் கடந்து வேலிகள் உடைத்து
புலம் பெயர்கின்றன
பெயரறியா பறவைகள்

முடிந்து விட்டதாய் மறந்து போன
நிலம் முட்டி முளைக்கின்றதொரு
சிறு தளிர்

உடைமைகள் சிதைத்து
உடையவர் உயிர் குடித்தடங்கும்
புயலுக்குப் பின் வருகிறதோர் அமைதி

இயற்கை தரும்
வாழ்க்கை பாடங்கள்
குறிப்பறிந்து பொருளுணர்க.

குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை(22-03-13)
இணைய இதழுக்கு நன்றி.

No comments:

Post a Comment