பிரதிநிதி

Monday, March 4, 2013


குழப்பங்கள் கருக்கொண்டு பிரசவித்த
சூன்யத்தினுள் கரைந்தபடி காலம்

தொப்புள்கொடி அறுபடும் முன்னரே
தாயையிழந்த பிஞ்சாய்
பற்றிக் கொள்வதற்கோரு விரல் தேடி
வீறிடுகிறது வறண்ட மனம்

பலநூறு பகலவனாய் சுட்டெரிக்கின்றன
இயலாமைகள் என் ஆகாயத்தை
ஏங்கித் தவிக்கின்றன
என் பாலைவன ஏக்கங்கள்

நிசியிலுறங்கா ஓநாயின் ஓலத்தோடு
கரைகிறதென் கதறல்
அருகிலிருக்கும் அரவத்தின் கிசுகிசுப்பில்
பயந்து ஒடுங்குகிறதென் சுயம்

என்னுடைய வாழ்வை
என் பயங்கள் வாழ்கின்றன.

குறிப்பு : இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (03-03-13)
இணைய இதழுக்கு நன்றி. 


No comments:

Post a Comment