என்னைப் போலவே

Saturday, March 9, 2013



விசித்திரமானதென் வீடு
வாசல்களற்றது
மேற்கூரையில் சன்னல்கள்

பகலில் இருளும் இரவில் ஒளிரும்
அதன் அறைகள்
தமக்குள்ளே உரையாடும்
மௌனத்தில்

வழிந்து கொண்டேயிருக்கும்
இசையில்லாத பாடலொன்றும்
வார்த்தைகளில்லா கவிதையொன்றும்

முன்னோக்கி மட்டுமே
நகர வேண்டிய நிர்பந்தம் துறந்த
நாட்காட்டி

வீட்டிற்கு வெளியே
இருந்து கொண்டேயிருக்கிறது
எல்லையில்லா வேலியொன்று
இன்னமும்

விசித்திரமானதென் வீடு
என்னைப் போலவே
என் அகத்தைப் போலவே.


குறிப்பு : இக்கவிதையை வெளியிட்ட வல்லமை (08-03-13)
இணைய இதழுக்கு நன்றி. 



No comments:

Post a Comment