ஆழ்நித்திரையிலிருந்த
கனவுகளனைத்தையும்
துயிலெழுப்பி
வரிசைக்கிரமமாய்
அடுக்கியாயிற்று
குறுங்கனவுகள்
முன்வரிசையில்
நீள்கனவுகள்
பின்வரிசையில்
இடைச்
செருகலாய் பகற் கனாக்கள் சில
நாளுக்கு
ஒன்றென
உதிரும் கனவு
மரத்தின் இலைகள்
அதிவிரைவில்
காணவிருக்கும்
இலைகளற்ற
கிளைகள் குறித்த
வெறுங்கனவோடு
சேர்ந்து
நகர்கிறது
இந்த இரவும்.
குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை(18-03-13)
மின்னிதழுக்கு நன்றி.
No comments:
Post a Comment