கனவுதிர்காலம்

Wednesday, March 20, 2013


ஆழ்நித்திரையிலிருந்த
கனவுகளனைத்தையும் துயிலெழுப்பி
வரிசைக்கிரமமாய் அடுக்கியாயிற்று
குறுங்கனவுகள் முன்வரிசையில்
நீள்கனவுகள் பின்வரிசையில்
இடைச் செருகலாய் பகற் கனாக்கள் சில
நாளுக்கு ஒன்றென
உதிரும் கனவு மரத்தின் இலைகள்
அதிவிரைவில் காணவிருக்கும்
இலைகளற்ற கிளைகள் குறித்த
வெறுங்கனவோடு சேர்ந்து
நகர்கிறது இந்த இரவும்.

குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை(18-03-13)
மின்னிதழுக்கு நன்றி. 


No comments:

Post a Comment