பூக்களுதிர் காலம்

Friday, March 1, 2013






நீண்டு நெளிந்து செல்லும்
குருதிப் புனலில் குளித்தெழுகிறது
இத்தரணி
பூக்கள் நிறைந்த வனத்தில்
ஒவ்வொரு அநியாயத்திற்கும்
ஒவ்வொரு வஞ்சனைக்கும்
ஒவ்வொரு குரோதத்திற்கும்
ஒவ்வொரு காழ்ப்புக்கும்
ஒவ்வொரு துரோகத்துக்கும்- சிந்தும்
ஒவ்வொரு அப்பாவியின் துளி இரத்ததிற்கும்
ஒவ்வொரு பாவத்திற்கும்- வடிக்கும்
ஒவ்வொரு துளி ஏழையின் கண்ணீருக்கும்
ஒன்றென்ற கணக்கில் உதிரத் துவங்கின.
மெல்லத் துவங்கியது தரணியின்
பூக்களுதிர் காலம்
உதிர்ந்து கருகிய பூக்களின் சாம்பலுக்கிடையே
முட்டித் துளிர்த்தது
நட்பெனும் ஒரு பூ
வையம் பூக்களின் காடானது
மீண்டும்.


குறிப்பு : இக்கவிதையை வெளியிட்ட வல்லமை ( 01-03-13)
மின்னிதழுக்கு நன்றி.

No comments:

Post a Comment