கூடடையும் பறவை

Tuesday, May 24, 2011



ஒவ்வொரு அந்தியிலும்
பறந்து களைத்த பறவை
கூடடைவதைப் போல
தனிமை வந்தமர்கிறது
என் கிளைகளில்
மொழிகள் மறுதலித்த
அடர் மௌன வனத்தின்
ஒற்றை மரமாய்
கிளைகள் பரப்பி நான்.
சில்வண்டுகளின் ரீங்காரமோ
காற்றின் சிலும்பலோ
இலைகளின் நடனமோ
ஏதுமற்ற பேரமைதியில் வனம்.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(15.05.11)இணைய தளத்திற்கு நன்றி

3 comments:

வருணன் said...

மிக்க நன்றி தோழரே.

jesheela said...

very nice kavithai varunan.

வருணன் said...

நன்றி ஷீலா.

Post a Comment