நினைவு நாசினி

Sunday, June 3, 2012







பிரிவின் கடைசி தருணத்தில்
மென்கரம் பற்றி அனிச்சையாய்
உளறின உதடுகள்
காலத்தை விட சிறந்த
நினைவு நாசினி யில்லை கண்மனி!
காலம் கரையும்...
நினைவுகள் நிலைக்கட்டும்
பழைய புத்தகத்தினுள் வைத்த
மயிலிறகைப் போல; நம்
மன அலமாரிகளை
பஞ்சு பொதித்த பொம்மையாய்
அலங்கரிக்கட்டும்
நேசமூறிய அக்காலங்கள்.

No comments:

Post a Comment