ஆலிவ் இலைகள்

Wednesday, June 6, 2012







ஒற்றை மஞ்ச கிரகத்தின்
ஒரே மானுட இணையாய்
சூரிய நட்சத்திரங்களோடு
ஆதிக் குடிபோல் மறைப்பின்றிக்
கிடக்கிறோம் ரகசியங்களற்று
அன்றலர்ந்த மலர் போன்ற
நின் வளைகரங்களின்
தீண்டல்களில்
பற்றிக் கொள்கிறது
கற்பூரக் காமம்
தேகமெங்கும்
என் விரல் புரவிகளின்
ஓட்டத்தால் செம்புழுதியப்பிய நிலமாய்
செந்நிறம் விரவும்
உன் வெண்தோல் போர்த்திய
சோலையெங்கும்
தோள் தாங்குமுன் பரிதிகளின்
இடை சுரக்கும் நீர்ச்சுனையில்
நீந்திடப் பேராவலுடன்
வீழுமென் நா அரவம்.
ஊன் மேகத்தில்
உயிர் பிரவாகிக்கும்
வெண் மழையோ கீழிருந்து
மேலெழும்பும்
முக்தி யாசிக்கும்
ஆன்மச் சுடர் போல
துடிக்கும் நம் உடல்களோ
வேர்களற்ற ஓர் ஆலிவ் கிளையின்
இரண்டே இலைகளாய்
எதிரெதிரே வளைந்தபடி.

இக்கவிதையை வெளியிட்ட உயிரோசை மின்னிதழுக்கு (04-06-12) நன்றி.

No comments:

Post a Comment