பெரு மழை

Saturday, June 9, 2012

போர்முரசாய் எக்காளமிட்டு
இடி இடிக்குமென் மெல்லிதயத்தில்

நாசிகள் புடைக்க அதரம் துடிக்க
வெளிவரும் சூறைக்காற்று

வான் விழிகளின் ஓரங்களில் துளிர்க்கும்
பெருமழையின் துவக்கமாய் சிறு தூரல்
கணங்கள் கரைய வெடித்துச் சிதறும்

அருவியினூடே தீற்றலடிக்கும்
சிவப்பு மின்னல்கள் கிளைகள் பிரிந்து

அடைமழையொன்று என்
கன்ன நிலங்களையும் மீசை வயல்களையும்
தாண்டி கழுத்துப் பள்ளத்தாக்கில்
கரணம் அடிக்கும்...

மழை ஓய நேரமாகலாம்.


இக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு ( 06-06-12)
மனமார்ந்த நன்றி.  
பட உதவி : 
புகைப்படத்துக்கு நன்றி:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgre0Ube9jj1ZP-RBPTas__XB5sj0FPJK5ZPAd4lOUEfu5czwlP7Ae0CinxNaRGbrO2Pzdgla4VROjXJHCspgmgfmHFZ7_J-MjZMe231mObyk8y7QL2lF8v5KlIsVelf8veVECt9OVisOQ/s1600/tears4.jpg




No comments:

Post a Comment