குழந்தைகளின் உலகங்கள்

Monday, December 20, 2010



குழந்தைகளின்
உலகங்கள் விசித்திரமானவை
அவர்கள் சொல்லும் கதைகளைப் போலவே
குழந்தைகளின்
உலகங்கள் வித்தியாசமானவை
நடவடிக்கைகள் வேண்டாத
அவர்களின் புகார்களைப் போலவே
குழந்தைகளின்
உலகங்கள் ஆச்சரியமானவை
காரணமற்ற பேரழுகைக்குப் பிந்தைய
அவர்களின் - கணப்பொழுதில் மலரும்-
ஆழ் அமைதியையும் அதைத் தொடரும்
குறும்புன்னகையைப் போலவே
குழந்தைகளின் உலகங்களை
நமக்கென்று ஒன்றாய் வைத்துக்கொள்ள
நகலெடுத்திட முடிவதேயில்லை
ஒருபோதும்
பிரதியெடுக்கவியலா
அவர்களது பரிசுத்தங்களைப் போலவே.


இக்கவிதையை வெளியிட்ட உயிரோசை(20.12.10) இணைய தளத்திற்கு நன்றி.

6 comments:

Anonymous said...

குழந்தைகள் உலகம் எப்போதும் அதிசயம் தான்!
உயிரோசையில் வெளி வந்ததற்கு வாழ்த்துக்கள் வருணன் :)

Unknown said...

Good one Varunan. Congrats.

வருணன் said...

நன்றி பாலா. நிச்சயமாக குழந்தைகள் உலகம் எப்போதும் அதிசயம் தான்!

வருணன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழரே. உங்கள் எழுத்துக்களை நானும் ருசிப்பதுண்டு மின்னிதழ்கள் வாயிலாக.ஆனால் தங்களது வலைப்பூவை தொடர வழியில்லையோ?

குட்டிப்பையா|Kutipaiya said...

//ஒருபோதும்
பிரதியெடுக்கவியலா
அவர்களது பரிசுத்தங்களைப் போலவே//

well said!!

வருணன் said...

நன்றி குட்டி பையா...

Post a Comment