புரியாத ஒன்று

Friday, February 15, 2013









என் விரலின் ரேகைகளை
பதிவு செய்யும்
நின் கன்னந்தழுவுமென்
ஒவ்வொரு வருடலும்

ஏதாவது சொல்லென
எனைத் துளைக்கும்
அவ்விழி மதில் தாண்டி
என்ன இருக்குமென தெரிவதில்லை
எத்தனை முறை முயன்றும்

தோளுரசுமுன் அருகாமையின் வெம்மையில்
வாஞ்சையாய் ஒடுங்கிக் கொள்ளுமென் உயிர்
நாய் குட்டியைப் போல்

இவைகளை மீறி என்னதான்
யாசிக்கின்றதென் சுயம்?

No comments:

Post a Comment