முடிவென்பதெல்லாம் முடிவல்ல

Tuesday, August 7, 2012









கைகளில் ஏந்திய
கொசுக்கள் கொல்லும்
மட்டையுடன் நிற்கிறோம்
பின் மாலைகள்தோறும்
தைமூரின் படையினை
எதிர்கொள்ளக் காத்திருக்கும்
முகமது ஷா துக்ளக்கின்
முனைப்புடன்.
உயரப் பறந்து தப்பிக்கும்
போர் விமானங்களை போல
உயிர் பயத்தில் ஓடுமவைகளை
மட்டையை வளைத்து,
மடித்துச் சுழற்றி லாவகமாய்
தகனமாக்குகிறோம் கம்பிகளுக்கிடையே
எல்லாம் முடிந்ததென
இறுமாந்து அயரும்
நடுநிசியில் தத்துவம் பயின்ற
ஒற்றைக் கொசு
டார்வினியம் போதிக்கிறது
காதுகளுக்குள் ரீங்காரமாய்.


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட  உயிரோசை ( 06.08.12) 
இணைய  இதழுக்கு நன்றி. 
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5847

No comments:

Post a Comment