முதன் முதலாய்...

Sunday, November 28, 2010



மற்றவரிடம் பழகியதால்
கிடைத்தது கவிதைகள் சில
உன்னுடனான பந்தத்தால்
கூடவே ஒரு வாழ்க்கையும்
புதிதாய்

நதிகள் சேருமிடம் பலவாயினும்
கலப்பது கடலிலேதான்
என் வார்த்தைகள் பலாவாயினும்
கருப்பொருள் ஒன்றுதான்.

காதலென்பது எடுப்பதன்று
கொடுப்ப தென்றுணர்ந்தேன்.
கொடுத்தேன் என்னை...

நம் நேசம் கற்பித்தபடி
முழுமையாய் காதலிக்கத்
துவங்கியிருக்கிறேன் – என்
தாயை,தங்கையை,தந்தையை,
தமையனை, நண்பர்களை,
சக பயணியை, எதிர் வீட்டு நாய்குட்டியை...

2 comments:

Anonymous said...

இயல்பான நடையில் ஒரு காதல் மன ஓட்டங்கள்.. :)

வருணன் said...

நன்றி பாலா...

Post a Comment