காலச்சித்திரம்

Wednesday, October 9, 2013





நாபியினின்று புறப்பட்டு
உயிர்வளிப் பிளிறலாய்
துவங்குகிறது அகத்தின் ஓலம்
காலமெனும் கண்ணாடியின்
பின்னும் முன்னும்
இறப்பும் எதிர்பார்ப்பும் விரிய
பிம்பமாய் மத்தியில் உறையும் இக்கணம்
இருப்பின் மையம் குறித்த தேடலே
இருத்தலின் மையமான பின்னே
புரிதலின் மலர் அவிழும் பொழுதில்
அதீதத்தின் ருசி நாவுகளில் தித்திப்பாய்
சில மிடறு ஞானப் பாலுக்கு இணையாக
என்னையே கேட்ட காலன்
கையளித்த சகலமும் குழைத்து
வரைகிறான் சித்திரமொன்றை
சிரஞ்சீவித இருளின் சாயலில்
அவடிவ தூரிகை கொண்டு
.

குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட இறக்கை 
இதழுக்கு நன்றி.







No comments:

Post a Comment