எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்

Tuesday, June 7, 2011




அதீத வாஞ்சையொன்று முட்டித் தள்ள
உந்துதலில் உரைக்கிறேன் உன் பெயரை
வெண்புகை குடை விரித்த
மலைச் சிகரத்தினுச்சியில்
காற்றில் தவழ்ந்த பெயரோ
நேற்றுப் பிறந்த மழலையாய் சிணுங்கி
அடர் பச்சை ஊசியிலை மரங்களின்
இலைகளின் கைகுலுக்கி
நீர் சுனையொன்றில் குளிக்கக் குதித்தது.
மலையின் மடியில் வீசிய
நெற்பயிரின் தலை கோதி
நெல்மணியின் கரம் பற்றி ஊசலாடி
கரைகின்றது காற்றில்
இதுவரையில் உறவாடிய உன் பெயர் கூட
இனியெனக்குச் சொந்தமில்லை.
அது எங்கிருந்து எடுக்கப்பட்டதோ
அங்கேயே கொடுக்கப்பட்டது.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (05.06.11)
இணைய தளத்திற்கு நன்றி

5 comments:

jesheela said...

ovvaru varikalum arumai vazhathukal.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

வருணன் said...

நன்றி ரத்னவேல் அவர்களே. நன்றி ஜெஷீலா. தங்கள் இருவரின் தொடர் வருகைக்கு எனது நன்றிகளும் அன்பும்...

வளத்தூர் தி.ராஜேஷ் said...

அருமை நண்பரே வாழ்த்துகள் .

வருணன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜேஸ்.

Post a Comment