அவனது அன்றாடம்

Friday, June 10, 2011



ஒரே உடுப்பு
ஒரு அழுக்கு மூட்டை
இவனை தரிசிக்காமல்
கடவுளைப் பார்ப்பது இயலாதது.
உண்டு பார்த்தாரில்லை
கொஞ்சம் தேநீர்
சில விள்ளல் பிரசாதம்
பணமிருந்தால் மாலையில் கஞ்சா
அல்லது பீடி
பிரகாரம் நோக்கி மறந்தும்
திரும்பியதில்லை விழிகள்.
ஆட்கள் கடக்கையில் ’சாமி’என்பான்.
அதிக சில்லரை தருபவரிடம் சிரிப்பான்
நிகோடின் பற்கள் தெரிய.

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இது போன்ற அன்றாடங்கள் அடைக்கலம் ஆவது கோயில்களே...


எளிமையான கவிதை...
வாழ்த்துக்கள்..

வருணன் said...

நன்றி சௌந்தர்... வருகைக்கு நன்றி நண்பா.

Post a Comment