சரிபார்பதர்காய் கிறுக்கிய
புதிய எழுதுகோலின் கிறுக்கல்கள்
உன் கூந்தலாகியது
உன் கேசம் வருடிய என்
விரல்கள் தூரிகையாகின
வண்ணம் வாங்கிய உன்
கவிழ்ந்த பிறை நெற்றியோ
வானவில்லானது
நீ சாய்ந்து உறங்க ஆரம்பித்த
கணம் தொட்டு என் வலக்கரம்
உனக்கு தூளியானது
எனக்கோ உனதிந்த இருப்பு
வாழ்வு முழுமைக்குமான
வரமானது.
4 comments:
Hi joena a good start for ur blog congrates...........post all ur poems in this blog.....
உங்கள் வரம் எங்களுக்கு கவிதை ஆகியது ஜோ ...
மீண்டும் வருவேன் ...
அன்புடன்
நியோ
congrates anna.. nice
anitha..
சூப்பர்
Post a Comment