
என் கர்வக் கேணியில்
குளித்தெழும் நானென்னும் ஆணவம்
பீடம் ஏறியமர்ந்து
அடிபணிய நிர்பந்திக்கும்
உன் பெண்மையை.
பதியின் வாக்குக்குப்
பணிந்து நடவென்றே சொல்லும்
நீ கேட்ட கற்பிதங்கள்.
ஆயினும் உன் சுயமுன்னை
சிந்திக்கவே சொல்லும்.
சொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.
No comments:
Post a Comment