
பகலுக்கு ஒளியூட்டும்
ஆதவன் அணைகையில்
இரவுக்கு தெம்பூட்டும்
பால் நிலா
தகிக்கும் வெயிலுக்கு
மாற்றாய் நிழலும் கிட்டும்
ரணங்கள் தரும் வையமே
மருந்தும் தரும்
கவலை கொள்ளாய் மனமே!
சன்னல்கள் அடைபட்டால்
போகட்டும்
கதவுகள் திறக்கும்.
சொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.
No comments:
Post a Comment