
பம்பரம் விட்ட பால்ய நாட்கள்
திமிறித் திரிந்த இளமை முறுக்கு
யதார்த்தம் உறைத்த நடுத்தர வயது
சோர்ந்து சாய்ந்திருப்பினும்
அனுபவங்கள் புடமிட்ட முதுமை
சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தில்
வந்த பகுதி மீண்டு(ம்) வராமலேயே
எல்லாம் முடிந்து விடுகிறது
இமை மூடித் திறப்பதற்குள்.
No comments:
Post a Comment